புத்தக கண்காட்சியில் வாங்கிய மற்றுமொரு புத்தகம் என்று வாசகர்களுக்கு சொல்ல தேவையில்லை. 400 பக்கங்களை கொண்டது. உதயணன் எழுதிய புத்தகங்கள் மேல் எனக்கு பெரியதாக அபிப்ராயம் இருந்ததில்லை. கடல் கோட்டை புத்தகத்தின் காரணமாகவும் இருக்கலாம். எனினும் தம்பியின் வற்புறுத்தலை தட்ட முடியவில்லை.
புத்தகம் யாரை பற்றியது தெரியுமாடா என்று கேட்டேன். மூன்றாம் நந்திவர்மன். இரண்டு பாகங்கள். அவரின் வடதிசை மற்றும் தென்திசை போர்களை பற்றியது. செமையா இருக்கும் என்று சொன்னான்.
புத்தகம் வாங்கி இரண்டு மாதங்களுக்கு பிறகே படிக்க தொடங்கினேன். கிண்டிலில் ஆங்கில புத்தகங்களையும் படிப்பதால் தமிழ் புத்தகங்களுக்கு முன்போல் நேரம் ஒதுக்க முடிவதில்லை. மேலும் நான் ஆங்கிலத்தில் கொஞ்சம் வீக் என்பதால் எழுத்து கூட்டி படிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. :P
நந்திவர்மன் தனது தந்தையை தோற்கடித்த ராஷ்டிரகூடர்களை பழி வாங்க போர் புரிவதுதான் கதை. நேர்மையான அரசன், துர்குணங்கள் கொண்ட அரசனின் தம்பி, சில வில்லன்கள், சைவம்-பெளத்தம் சமயங்கள் இடையே நிகழும் உரசல்கள், காதல், காமம் என்று சுவாரசியமாக எழுத முயற்சித்திருக்கிறார்.
ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு திரைப்படத்தின் பெயர். அத்தியாயத்தின் ஆரம்பத்தில் மறக்காமல் சிவனை புகழ்கிறார். ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா பினிஷிங் சரியில்லையே என்பதற்கு ஏற்றார் போல் ஆங்காங்கே காம மழையில் நம்மை நனைய வைக்கிறார். நானும் பல ஆசிரியர்களின் புத்தகங்களை படித்திருக்கிறேன். ஆனால் உதயணன் அளவிற்கு காம ரசம் சொட்ட சொட்ட யாரும் எழுதியதில்லை.
ராஷ்ட்டிரகூடத்தின் இளவரசியான சங்காவின் பறவைகள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துவதற்கு பதில் நமக்கு சிரிப்பைதான் வரவழைக்கிறது. சில இடங்களில் புத்தகம் படிக்கிறோமா அல்லது விட்டலாச்சார்யாவின் படம் பார்க்கிறோமா என்று எண்ண வைக்கிறது.
புத்தகத்தின் அடுத்த அத்தியாயம் எப்படி இருக்கும் என்று யூகித்து விட முடிவது மற்றுமொரு குறை. நிறைகளை விட குறைகளே புத்தகத்தில் அதிகம். பொதுவாக நான் புத்தகங்களை குறை கூறுவது இல்லை. ஒரு புத்தகம் எழுத கடும் உழைப்பு தேவைப்படும். ஆனால் இந்த புத்தகத்தை பொருத்தவரை என்னால் குறை கூறாமல் இருக்க முடியவில்லை. :-(
புத்தகம் யாரை பற்றியது தெரியுமாடா என்று கேட்டேன். மூன்றாம் நந்திவர்மன். இரண்டு பாகங்கள். அவரின் வடதிசை மற்றும் தென்திசை போர்களை பற்றியது. செமையா இருக்கும் என்று சொன்னான்.
புத்தகம் வாங்கி இரண்டு மாதங்களுக்கு பிறகே படிக்க தொடங்கினேன். கிண்டிலில் ஆங்கில புத்தகங்களையும் படிப்பதால் தமிழ் புத்தகங்களுக்கு முன்போல் நேரம் ஒதுக்க முடிவதில்லை. மேலும் நான் ஆங்கிலத்தில் கொஞ்சம் வீக் என்பதால் எழுத்து கூட்டி படிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. :P
நந்திவர்மன் தனது தந்தையை தோற்கடித்த ராஷ்டிரகூடர்களை பழி வாங்க போர் புரிவதுதான் கதை. நேர்மையான அரசன், துர்குணங்கள் கொண்ட அரசனின் தம்பி, சில வில்லன்கள், சைவம்-பெளத்தம் சமயங்கள் இடையே நிகழும் உரசல்கள், காதல், காமம் என்று சுவாரசியமாக எழுத முயற்சித்திருக்கிறார்.
ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு திரைப்படத்தின் பெயர். அத்தியாயத்தின் ஆரம்பத்தில் மறக்காமல் சிவனை புகழ்கிறார். ஓப்பனிங்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா பினிஷிங் சரியில்லையே என்பதற்கு ஏற்றார் போல் ஆங்காங்கே காம மழையில் நம்மை நனைய வைக்கிறார். நானும் பல ஆசிரியர்களின் புத்தகங்களை படித்திருக்கிறேன். ஆனால் உதயணன் அளவிற்கு காம ரசம் சொட்ட சொட்ட யாரும் எழுதியதில்லை.
ராஷ்ட்டிரகூடத்தின் இளவரசியான சங்காவின் பறவைகள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துவதற்கு பதில் நமக்கு சிரிப்பைதான் வரவழைக்கிறது. சில இடங்களில் புத்தகம் படிக்கிறோமா அல்லது விட்டலாச்சார்யாவின் படம் பார்க்கிறோமா என்று எண்ண வைக்கிறது.
புத்தகத்தின் அடுத்த அத்தியாயம் எப்படி இருக்கும் என்று யூகித்து விட முடிவது மற்றுமொரு குறை. நிறைகளை விட குறைகளே புத்தகத்தில் அதிகம். பொதுவாக நான் புத்தகங்களை குறை கூறுவது இல்லை. ஒரு புத்தகம் எழுத கடும் உழைப்பு தேவைப்படும். ஆனால் இந்த புத்தகத்தை பொருத்தவரை என்னால் குறை கூறாமல் இருக்க முடியவில்லை. :-(
No comments:
Post a Comment