Saturday, January 14, 2012

காந்தளூர் போர் ஏன் நிகழ்த்தப்பட்டது?

நான் blogs எழுதவதில் சிறந்தவன் அல்ல. இதுவே எனது முதல் பதிவு. எனவே ஏதேனும் குற்றம் குறைகள் இருந்தால் பொருத்தருளுங்கள். :)

நம்மில் பல பேருக்கு ராஜ ராஜ சோழன் ஒரு மிக பெரிய அரசன் என்பது தெரியும். ஆனால் அவர் ஆட்சி பீடத்தில் ஏறுவதற்கு எவ்வளவு கஷ்டங்களை எதிர் கொண்டார் என்பது நம்மில் பல பேருக்கு தெரியாது என்பதே உண்மை. ராஜ ராஜ சோழன் தன் தந்தைக்கு பிறகு ஆட்சி கட்டிலில் ஏறியிருக்க வேண்டியவர். எனினும் சிம்மாசனத்தை தன் சிற்றபனுக்கு விட்டு கொடுத்து விட்டு 16  வருடங்கள் அமைதியாக இருந்தார். ஏன் விட்டு கொடுத்தார்? ஏன் சோழ சிம்மாசனத்தை தூக்கி எறிந்தார்? இவை எல்லாவற்றையும் நான் கூறி விட்டால் நீங்கள் பொன்னியின் செல்வனை படிக்க மாட்டீர்கள். எனினும் ஒரு சிறிய தகவலை கூறாவிட்டால் இந்த வலை பதிவு உங்களுக்கு புரியாது. 

சுந்தர சோழருக்கு இரண்டு புதல்வர்கள் : ஆதித்ய கரிகாலன் மற்றும் அருண் மொழி வர்மன் (ராஜ ராஜ சோழன்). இதை தவிர அவருக்கு மதுராந்தகன் என்ற தம்பியும் உண்டு. மதுராந்தகனுக்கும் சிம்மாசனத்தின் மேல் ஒரு கண் உண்டு. 

சுந்தர சோழர் மன்னராக இருந்த போதே பாண்டிய நாட்டையும் சேர நாட்டையும் இலங்கையின் வட பகுதியையும்  சோழர்கள் கை பற்றி விட்டார்கள். சுந்தர சோழர் தன்னுடைய மரண படுக்கையில் இருக்கும் போது பாண்டிய நாட்டின் ஆபத்துதவிகள் ஆதித்ய கரிகாலனை மர்மமான முறையில் கொலை செய்து விட்டார்கள். சுந்தர சோழருக்கு அடுத்து பட்டத்துக்கு வர வேண்டியவன் இறந்து விட்ட நிலையில் அடுத்து பட்டத்துக்கு அருண் மொழியே வருவார் என்று மக்களால் எதிர் பார்க்கப்பட்ட போது சிம்மாசனம் வேண்டாம். என் சிற்றப்பனே ஆட்சி செய்யட்டும் என்று கூறி அருண் மொழி உடையார்குடியில் வசிக்க தொடங்கி விட்டார்.

உத்தம சோழன் நல்லவனா கெட்டவனா என்று இன்று வரை தெரியவில்லை. ஆனால் அவர் ஆட்சி காலத்தில் ஆதித்ய கரிகாலனை கொன்ற குற்றவாளிகள் தண்டிக்க படவில்லை என்றே வரலாற்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். இந்த 16 வருடத்தில் அருண் மொழி வர்மர் தன் தமயனை கொன்றவர் யார் என்று விசாரிக்க தொடங்கினார். தன் அண்ணனை கொன்றவர்கள் தன் சிற்றப்பனின் ஆட்சியில் கொழிப்பதையும் கண்டார். தன் சிற்றப்பனிடம் சென்றார். இதை பற்றி நியாயம் கேட்டார். கிடைக்காது என்று தெரிந்தவுடன் அவரை ஆட்சி பீடத்தில் இருந்து தூக்கி எறிந்து விட்டு நானே சோழ நாட்டின் சக்கரவர்த்தி என்று பிரகடன படுத்தி கொண்டார்.

எவன் தன் அண்ணனை கொலை செய்தானோ அவன் தலையை ராஜ ராஜனால் கொய்திருக்க முடியும். ஆனால் அப்படி செய்யாமல் அவர்களையும் அவர் குடும்பத்தாரையும் நாடு கடத்தினார் (இப்படி செய்ததற்கு அவர்கள் அந்தணர்கள் என்பதும் காரணமாக இருக்கலாம் என்று பாலகுமாரன் உடையாரில் எழுதி இருந்தார்). ஆனால் அதுவே அவர் முதற் போருக்கு வழி வகுக்கும் என்று தெரிந்திருந்தால் அவர் அப்படி செய்திருக்க மாட்டார். ஆம். நாடு கடத்தப்பட்ட பாண்டிய நாடு ஆபத்துதவிகள் ராஜ ராஜனையும் கொலை செய்ய துடித்தார்கள். காந்தளுரில் ஆட்கள் சேர்த்து போர் முறையை பயிற்றுவிக்க ஆரம்பித்தார்கள். 

நாடு கடத்தப்பட்டும் இவர்கள் திருந்தவில்லையே என்று ராஜ ராஜ சோழர் காந்தளூர் படையெடுப்பை நிகழ்த்தினார். காந்தளூர் அடித்து நொறுக்கப்பட்டது. 

உத்தம சோழன் பற்றி எனது அடுத்த வலை பதிவு இருக்க கூடும்..