Saturday, May 31, 2014

சென்னையில் டிராம்கள் (Trams in Chennai) - ஒரு பார்வை

பணத்தின் பின் பேயாக திரியும் இன்றைய இயந்திர மற்றும் சுயநல வாழ்கையில் டிராம்கள் பயன்பாட்டில் இருந்திருந்தால் டிராம் கம்பேனி நஷ்டத்தில் தான் ஓடியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏன் என்றால் டிராம்கள் மணிக்கு 7 மைல் வேகத்தில்(!) செல்ல கூடிய ஒன்று. இன்றும் இந்தியாவில் டிராம்கள் கொல்கத்தா நகரத்தில் இருக்கின்றன. காலத்திற்கேற்ப மாற்றி அமைக்கப்பட்டு சாலைகளில் டிராம்கள் ஓடி கொண்டிருக்கின்றன.

சில சமயம் தேவன் புத்தகங்களில் மனிதர்கள் டிராம்களில் பயணம் செய்வார்கள். அவற்றை படிக்கும் பொழுது அதை பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். அந்த எண்ணத்தை இந்த ப்ளாகின் மூலம் நிறைவேற்றி கொள்கிறேன். இதில் எழுதப்படும் தகவல்கள் அனைத்தும் இணையத்தில் சிதறி கிடப்பவையே. புதியதாக எந்த தகவலும் இல்லை என்றாலும் முடிந்த வரை தொகுத்து எழுத முயற்சி செய்கிறேன்.


அன்றைய கிழக்கிந்திய கம்பெனியால் மெட்ராஸ் எலெக்ட்ரிக் டிராம்வே (Madras Electric Tramway Ltd) 1892 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ட்ராம் ஓடுவதற்கான டிராம்வே (Tramway) போடும் பணிகள் April மாதத்தில் தொடங்கப்பட்டது. முதல் கட்ட பணிகள் முடிந்து சென்னையில் டிராம்கள் ஓட துவங்கிய தினம் மே 7, 1895. 1904 ஆம் ஆண்டில் 100 க்கும் மேற்பட்ட டிராம்கள் சென்னையின் பல்வேறு குடியிருப்பு பகுதிகளையும் புறநகர் பகுதிகளையும் இணைக்கும் பணியை செவ்வனே நிறைவேற்றியது.

சில டிராம்கள் குறைந்த தூரம் பயணம் செய்பவையாகவும் சில டிராம்கள் நெடு தூரம் பயணம் செய்பவையாகவும் இருந்துள்ளன. நெடு தூரம் என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளவை Washermanpet to Purasaiwakkam, Royapuram to Egmore, Mylapore to George Town ஆகியவை. இந்த தூரத்தை Google Maps இல் பார்த்தால் 7-8 KM வருகிறது. பிறகு எப்படி இது நெடுந்தூரம் ஆகும் என்ற கேள்வி எழுகிறதா!! டிராமில் பயணம் செய்தால் இது நெடுந்தூரம் போல் தோன்றும். ஏன் என்றால் டிராமின் அதிகபட்ச வேகம் ஒரு மணி நேரத்திற்கு 7 KM தான்.

Mylapore முதல்  George Town வரை செல்ல கட்டணம் இரண்டு அணாக்கள் மட்டுமே. அதாவது ஒரு ரூபாயின் எட்டில் ஒரு பங்கு (One Eighth of a rupee).தோராயமாக ஒரு KMக்கு  0.25 அணா (1.56 பைசா). இன்று ஒரு KMக்கு நாம் செலவழிக்கும் தொகை தோராயமாக 1.25 ருபாய். 80 மடங்கு குறைவு. நமது பணத்தின் மதிப்பு எந்த அளவு சரிந்துள்ளது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

அன்றே daily pass முறை இருந்துள்ளது. ஆனால் ஞாயிறு மட்டுமே. 6 அணா டிக்கெட் வாங்கினால் நாள் முழுதும் எங்கு வேண்டுமானாலும் டிராம்களில் சென்று வரலாம். மாத சீசன் டிக்கெட் ஒரு குறிப்பிட்ட தடத்திற்கு 6 ரூபாய். அனைத்து தடங்களுக்கும் என்றால் 10 ரூபாய். டிரைவர் மற்றும் கண்டக்டர் காக்கி உடுப்புகள் அணிந்திருப்பர். அனைத்து பெட்டிகளுக்கும் ஒரே கண்டக்டர் தான். மிக அரிதாக டிக்கெட் பரிசோதகர் டிராமில் ஏறி டிக்கெட்களை பரிசோதிப்பதுண்டு.

சென்னையில் டிராம்கள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 700 மைல்கள் (~1120 KM) பயணித்துள்ளது மற்றும் சராசரியாக 1.25 லட்சம் பயணிகளை ஏற்றி சென்றுள்ளது.ஒவ்வொரு டிராமும் இரு எலெக்ட்ரிக் மோட்டார்களை கொண்டிருந்தது. டிராமின் தலைக்கு மேல் உள்ள எலெக்ட்ரிக் கேபிள்கள் மூலம் மோட்டார்கள் உயிரூட்டப்பட்டன.

1951-52 ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு மாத மாதம் 40 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்ப்பட்டது. இதனால் அரசாங்கம் டிராம்களை நிறுத்த முடிவு செய்தது. 1953 ஆம் ஆண்டு சரியாக ஏப்ரல் 12 ஆம் தேதி நள்ளிரவு டிராம்கள் நிறுத்தப்பட்டன. 1650 பேருக்கு வேலை போனது. லட்சத்திற்கும் மேற்ப்பட்ட பிரயாணிகள் ஏப்ரல் 13 முதல் பேருந்துகளையும் குதிரை வண்டிகளையும் நாட வேண்டியதாகிற்று.

Tuesday, May 13, 2014

தஞ்சை கோவில் – உச்சிக்கல் மர்மம் (Cap Stone Mystery)

தஞ்சை கோவிலை பற்றி நிறைய மனிதர்கள் தேவையான அளவு எழுதி உள்ளனர். எனினும் இன்றைய இயந்திர வாழ்கையில் நாம் இறக்கும் முன்பு எழுதிய அனைத்தையும் படித்து முடிக்கமுடியுமா என்று தெரியவில்லை. எனினும் இந்த கோவிலை பற்றி பல சந்தேகங்கள் எழுவதுண்டு. அதில் ஒன்றுதான் விமானத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் கல்லை பற்றியது. இன்னும் குழப்பமா? கீழே காணும் போட்டோவை பார்த்தால் தெரிந்து விடும் நாம் எதை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்று.

இந்த கோவிலே அதிசயம் தான் என்றாலும் இந்த கல் மற்றுமொரு அதிசயம். இந்த கோவில் முழுவதும் ”GRANITE” எனப்படும் கருங்கல்லால் கட்டப்பட்டது. மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள கல் சுமார் 80 டன் எடை உள்ளது. 
முதல் சந்தேகம் இந்த கல்லானது ஒரே கல்லா அல்லது இரு அரை வட்ட கற்களை (2 semi-circles) உள்ளடக்கியதா என்பது. இதற்கு பல விதமான வாதங்களும் பிரதிவாதங்களும் நடந்துள்ளன. சிலர் ஒரே கல் என்றும் சிலர் இரு அரை வட்ட கற்கள் சேர்ந்தது என்றும் கூறுகின்றனர். என்னை போல் 8 மணி நேரம்  கம்ப்யூட்டர் முன் செலவிடும் இளைஞர்களால் நீலகண்ட சாஸ்த்ரிகளையும் சதாசிவ பண்டரத்தாரையும் படித்து தெளிவடைய முடியாது.  Google  தான் எங்களை போன்ற கோடானு கோடி மக்களுக்கு உற்ற துணைவன். J
Google செய்த போதும் சரியான தகவல் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சில பல புத்தகங்களை படிக்கவைத்து விடுவார்களோ என்ற பயம் எழுந்தது. அனைவரும் ஒன்று போல்,விமானம் 216 உயரம். இந்த உச்சிக்கல் 80 டன் எடை. இது இன்றளவும் ஒரு மர்மமும் ஆச்சர்யமும் கலந்ததாக உள்ளது என்று கூறி முடிக்கின்றனர். வேறு எதுவும் புதியதாக கூறவில்லை.



எனினும் ஒரு குத்து மதிப்பாக இது ஒரே கல் என்ற முடிவுக்கு பெரும்பாலனோர் வருகின்றனர். ஊருடன் ஒத்து வாழ்  என்ற மொழிகேர்ப்ப நாமும் அந்த முடிவையே எடுக்க வேண்டியுள்ளது. ஓரளவிற்கு மேல் தேடுவதில் பயனில்லை என்பதாலும் அதை விட இந்த மாதிரியான விஷயங்களுக்கு தேவையான பொறுமை நேரம் செல்ல செல்ல குறைகிறது என்பதே இந்த முடிவிற்கு காரணம்.  


அடுத்த மர்மம் இவ்வளவு பெரிய கல்  விமானத்தின் உச்சியில் எப்படி ஏற்றப்பட்டது என்பது தான். சற்றே சிந்திதோமானால் இரு வழிகள்  நமக்கு தோன்றும். 



முதல் வழி விமானம் கட்டப்பட கட்டப்பட சுருள் வழி பாதை (spiral route) போட்டிருக்க வேண்டும். ஆனால் அப்பாதை மற்ற கற்களை வேண்டுமானால் எடுத்து செல்ல உதவியிருக்கலாமே ஒழிந்து இந்த உச்சிக்கல்லை அல்ல. ஏனென்றால் இவ்வளவு எடையுள்ள கல் மேலே எடுத்து செல்லப்படவேண்டும் என்றால் மிகவும் எச்சரிக்கை அவசியம். எடுத்து செல்லும் பொழுது சிறு தவறு நேர்ந்தாலும் உயிர்ச்சேதம் மிக அதிகமாக இருக்கும். எனவே இந்த வழி வேலைக்கு ஆகாது. ஆனால் பாலகுமாரன் உடையாரில் இறுதி வரை இந்த கல்லை பற்றியோ அல்லது இவ்விமானத்தின் நிழல் தரையில் விழாதவாறு கட்டப்பட்டதை பற்றி கூறவில்லை என்பது ஒரு குறையே.

அடுத்த வழி மிகவும் உசிதமான வழி. விமானத்தின் உயரத்திற்கு சரிவு பாதை அமைத்து பாதையின் இரு பக்கங்களையும் அடைத்து யானைகளை வைத்து உருட்டி கொண்டே வந்திருக்க வேண்டும். இந்த வழியிலும் மேற்கூறிய ஆபத்து இருந்தாலும் வழி பெரியதாக போடப்பட்டிருந்தால் கல்லை மிக மிக பொறுமையாக நகர்த்தி உச்சிக்கு கொண்டு வந்துவிடலாம். Discovery channel இல் காட்டிய அதே வழிமுறைதான் ஒத்து வருகிறது.

இறுதியாக விமானத்தின் நிழல் அதன் மேல் விழுவதன் காரணம் மிக சுலபமானது. ஆம். விமானம் செவ்வக வடிவிலான பலகைகளை கொண்டு எழுப்பப்பட்டது. அதாவது கீழிருக்கும் பலகை அதன் மேல் இருக்கும் பலகையை விட அகலமானதாக இருக்கும். இதனால் மேல் இருக்கும் பலகையின் நிழல் அதன் கீழிருக்கும் பலகையிலே விழுந்து விடும். இதனால் நிழல் பூமியில் விழாது. அவ்ளோதான்.