Tuesday, April 23, 2013

தில்லை கோவிலுடன் தென்னிந்திய அரசாங்கங்களின் பிணைப்பு - பகுதி 2

தொடர்கிறது...

முதலாம் ராஜேந்திரன்:

கங்கையும் கடாரமும் கொண்டவன். சோழ நாட்டை உச்சத்திற்கு கொண்டு சென்றவன். இம்மன்னனைப்பற்றி எழுத வேண்டுமென்றால் எழுதி கொண்டே போகலாம்.

தில்லையுடனான ராஜேந்திர சோழரின் பிணைப்பை முடிந்தவரை விரிவாக எழுத முயற்சிக்கிறேன். ராஜேந்திர சோழர் காலத்தில்தான் சோழர்களுடைய தலைநகரம் கங்கை கொண்டசோழபுரம் என்னும் நகரத்திற்க்கு மாற்றப்பட்டது.

இதற்கு வரலாற்று ஆய்வாளர்கள் பல்வேறு காரணங்களை கூறுகின்றனர்.

அவற்றுள் முதன்மையானது சோழர்களின் பரம வைரிகளான மேலை சளுக்கர்களின் நாட்டிற்க்கும் சோழ நாட்டிற்க்கும் இடையேயான தூரத்தை குறைப்பது. அதாவது துங்கபத்ரை நதிக்கரை வரை நீண்டிருந்த சோழ நாட்டிற்க்கும் அவ்வாற்றுக்கு அப்புறம் அமைந்திருந்த சளுக்கர்களுக்கும் இடைப்பட்ட தூரத்தை குறைப்பதற்க்கு மேற்க்கொள்ளப்பட்டதே இதற்கு முதன்மையான காரணமாக இருந்திருத்தல் வேண்டும்.

சளுக்கர்களின் தலைநகரமானது மான்யகேடம் என்னும் நகரமாகும். இந்நகரம் சத்யாஸ்ரேயனின் ஆட்சிக்காலத்தில் ராஜ ராஜ சோழரால் தரைமட்டமாக்கப்பட்டது. இதை அடுத்து இரு நாட்டினருக்கும் இடையேயான பகை முற்ற தொடங்கியது.

தெற்கே பாண்டியர்களின் நாடு சோழர்களிடம் முற்றிலும் அடிப்பணிந்திடவும் ராஜேந்திரரின் கவனம் வடக்கு நோக்கி நகர்ந்தது. சளுக்கர்கள் சோழ  நாட்டுக்குள் நுழைந்திட்டால் தஞ்சையிலிருந்து படைகள் எல்லையை அடைந்திட நேரம் அதிகம் ஆகிடும் என்பது ஒன்று.

ஒற்றர்கள் சளுக்க நாட்டிலிருந்து சேகரித்து வரும் செய்திகளை  அரசதிகாரிகளை சந்தித்து கூறுவதற்க்கும் எளிது என்பது இரண்டாவது. அதாவது சளுக்க நாட்டிலிருந்து தலைநகரத்தை அடைய  முன்பை விட ஒரு நாள் குறைவாக தேவைப்படும்.

இவ்விரண்டு மட்டுமே காரணங்களல்ல என்று மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திட விரும்புகிறேன்.இவ்விரண்டைத்தவிர மேலும் சில காரணங்கள் உண்டு. அதைப்பற்றிய விவரங்கள் அடுத்த பதிவில்....

வாசகர்கள் இது வரை ராஜேந்திர சோழரின் தில்லை பிணைப்பை பற்றி ஒரு வரி கூட இடம்பெறவில்லை என்று நினைக்கலாம். வாசகர்களின் பொறுமையை இது வரை கூறிய தகவல்கள் சோதித்திருக்காது என்று திடமாக நம்புகிறேன்.