Sunday, November 30, 2014

சுங்கம் தவிர்த்த சோழன் - The Chola King who abolished tolls

சுங்கம் தவிர்த்த சோழன் என்பது மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பட்டமாகும். இப்பட்டத்திற்கு உரியவன் முதலாம் குலோத்துங்கன் ஆவான். அக்காலத்தில் வாணிபர்கள் வாணிபம் செய்ய ஊர் விட்டு ஊர் செல்லும் பொழுது செல்லும் வழியில் எடுத்து செல்லும் பொருட்களுக்கு சுங்க வரி விதிக்கப்படும். இன்றைய நாட்களில் விமான நிலையங்களில் அல்லது துறைமுகங்களில் விதிக்கப்படும் கஸ்டம்ஸ் என்பதை போன்றது.

இவ்வாறு விதிக்கப்படும் வரியானது எதற்கு பயன்பட்டிருக்கும் என்று நினைக்கும் பொழுது சில எண்ணங்கள் தோன்றியது.  இரு பெரிய ஊர்களுக்கு இடையே இருக்கும் பெருந்தூரமானது அக்காலங்களில் காடுகளையும் காடுகளில் மறைந்து வாழும் கொள்ளை கூட்டங்களையும் கொண்டிருக்கும். தங்களது பொருட்களை வாணிபம் செய்யப்படும் வாணிகர்கள் காட்டு விலங்குகளாலும் கொள்ளையர் கூட்டங்களாலும் இன்னலுக்கு உள்ளாயினர். இதை தடுக்கும் பொருட்டு காடுகளுக்கு நடுவே வீரர்கள் பாதுகாப்பு அளிக்க தொடங்கியிருப்பர். வேவு பார்ப்பதற்கும் வசதியாக இருந்திருக்கும். இன்றைய நாட்களின் ஊர்க்காவல் படையை போன்றது. :)

அவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் வீரர்களுக்கு தகுந்த சம்பளமும் இன்னபிற இத்யாதிகளும்(Sundries) அளிக்க வேண்டுமே. அதற்காக சுங்கச்சாவடிகள் (Tollgates) அமைக்கப்பட்டன. வணிகர்கள் எடுத்து செல்லும் பொருட்களுக்கு ஏற்பவோ அல்லது வண்டிகளின் எண்ணிக்கைக்கு ஏற்பவோ வரிகள் விதிக்கப்பட்டன.

வசூலிக்கப்படும் இவ்வரிகள் பாதுகாவல் வழங்கும் வீரர்களின் சம்பளத்துக்கு மட்டும் அல்லாமல் இன்னபிற விஷயங்களுக்கும் உபயோகப்பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. உதாரணமாக அருகில் இருக்கும் கோவில்களில் சிற்சில செப்பனிடும் பணிகள், ஊர்க்கால்வாய்களை செப்பனிடும் பணிகளுக்கு உபயோகப்பட்டிருக்கும். அதாவது வசூலிக்கப்படும் சுங்கவரி மீது சுங்கசாவடிகளுக்கு அருகில் இருக்கும் கிராம சபைகளுக்கு அதிக உரிமை இருந்திருக்கக்கூடும். அதாவது கிராம சபைகள் சிற்சில பணிகளுக்கு தேவையான பணத்தை அல்லது நாணயங்களை கிராம சபையே வைத்திருக்கும். சுருக்கமாக கூற வேண்டுமென்றால் கிராம சபைகள் சோழ நாட்டின் தலைநகரத்தை  தங்களது தேவைக்கு அதிகமான செலவினங்களுக்கு மட்டுமே அணுகியிருக்கக்கூடும்.

இவ்வாறு பல்வேறு வகைகளில் பயன்பட்டு வந்த சுங்கவரியை ஏன் முதலாம் குலோத்துங்கன் ஏன் மொத்தமாக ஒழித்தார். சோழ நாட்டில் நிலவிய பல்வேறு உள்நாட்டு குழப்பங்களை மறைக்க குலோத்துங்கர் இதை ஒரு சூழ்ச்சியாக உபயோகித்தாரா? சுங்கவரியை முற்றிலும் ஒழித்ததுதான் சோழ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு வழி வகுத்ததா? இன்னும் தெளிவான சிந்தனைகள் கிடைக்கவில்லை. தெறிக்கும் சிந்தனைகள் அடுத்த பதிவில்...

தொடரும்....