Friday, January 31, 2014

தேவனும் எஸ்.வி.வியும்

வெகு சில ஆசிரியர்களே புத்தகங்கள் படிக்கும் பொழுது படிப்பவர்களை சம்பவம் நிகழும் காலத்தில் நாம் வாழ்ந்திருக்கவில்லையே என்று ஏக்கம் கொள்ள செய்வர். அப்படிப்பட்டவர்களுள் தேவனும் எஸ்.வி.வி அவர்களும் குறிப்பிட தகுந்தவர்கள்.

 

எப்பொழுதுமே அல்லையன்ஸ் பதிப்பகத்தாரின் புத்தகங்களில் இவ்விருவரின் புத்தகங்களுமே என்னை ஈர்க்கும். என்னையும் அறியாமல் கை நமைச்சல் எடுக்கும் புத்தகத்தை வாங்குவதற்கு. இம்முறை எஸ்.வி.வி அவர்கள் எழுதிய ராஜாமணி புத்தகத்தை வாங்கி நமைச்சலை தீர்த்தேன்.

 

சிறு வயதில் பெரிய புத்தகங்களை கண்டாலே உதறல் எடுக்கும் வயதில் எனது தந்தை நூலகத்தில் இருந்து தேவன் புத்தகங்களை எடுத்து வருவார். சி.ஐ.டி சந்துரு என்னும் புத்தகமே நான் படித்த முதல் பெரிய புத்தகம். அப்புத்தகத்தை படிக்கும் பொழுது ஒரு சிறிய நோட்டும் பேனாவும் குறிப்பு எடுக்கும் அளவிற்கு எனது ஞாபக சக்தி மங்கி இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும். J

 

முதல் அத்தியாயத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை பற்றி சந்துரு 20வது அத்தியாயத்தில் மிக சுவாரசியமாக விளக்கி கொண்டிருப்பார். எனக்கு ஒன்றும் விளங்காது. எனவே எனது குறிப்புகளை பார்த்து ஓஹோ இந்த சம்பவம் இந்த அத்தியாயத்தில் நடந்துள்ளது என்று என்னை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும். J

 

நூலகத்தில் இருந்த தேவன் புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடித்த பின் என்ன என்று விழித்து கொண்டிருந்த பொழுது தந்தை எஸ்.வி.வி அவர்கள் எழுதிய கோபாலன் ஐ.சி.எஸ் புத்தகத்தை கொணர்ந்தார். தேவன் அளவுக்கு இருக்குமா என்று கேட்டு கொண்டே படிக்க ஆரம்பித்தேன். தேவனுக்கு நிகராக நகைச்சுவை உணர்வு பொங்கும் படி எழுதி இருந்தார். எனினும் பெரிய அளவில் அவரது நூல்கள் நூலகத்தில் கிடைக்க பெறவில்லை.

 

சில வருடங்களுக்கு முன் பொன்னியின் செல்வனில் ஆரம்பித்து தொடர்ந்து வரலாற்று நாவல்களாக படித்து வந்ததால் ஒரு வித அயர்ச்சியும் ஈர்ப்பின்மையும் வந்து விட்டது. அதை தவிர்ப்பதற்காக இவர்களுடைய நூல்களை வாங்கி படிக்க ஆரம்பித்துள்ளேன். முதலாவதாக எஸ்.வி.வியின் ராஜாமணி புத்தகத்தை படிக்க ஆரம்பித்துள்ளேன்.. இன்னும் இரு வாரங்களில் அதை பற்றி ஒரு வலைப்பூ எழுத முயற்சிக்கிறேன். இவர்களுடைய புத்தகமும் உப்பு கடலையும் என்னை பொறுத்தவரை சிறந்த காம்பினேஷன். J

 

புத்தகத்தின் முதல் 3 அத்தியாயங்களை படித்த உடன் மனம் 1940களில் சஞ்சரிக்க தொடங்குகிறது. ஒற்றை மாட்டு வண்டி, வண்டி சத்தம், ஓவல்டின், ஐ.சி.எஸ் போன்ற வார்த்தைகளும் மனிதர்களுக்கு மத்தியில் நடக்கும் சம்பாஷனைகளும் நம்மை அக்காலத்திற்கு இழுத்து செல்கிறது. வலைப்பூ விரைவில்..


 

No comments:

Post a Comment